ADDED : ஜன 31, 2026 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தபால்நிலையம் முன்பு, காங்.,கட்சி சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக்கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு காங்., மத்திய மாவட்ட தலைவர் ரங்கமணி தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் திலகர், வட்டார தலைவர்கள் ராமகிருஷ்ணன், ஜனார்த்தனன், நகர தலைவர்கள் முருகன், ரவிக்குமார், பலராமன், ஓ.பி.சி.,அணி ராமராஜ், மீனவர் அணி கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், ஆனந்தன், கிஷோர், மணிகண்டன், வினுசக்ரவர்த்தி, ராஜேஷ், எஸ்.சி.,பிரிவு வேலுசாமி, சிறுபான்மை துறை அக்பர்அலி, மகளிரணி மகாலட்சுமி, புஷ்பா, கல்பனா, சாந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

