/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வலை பின்னும் கூடம் கட்டும் பணி துவக்கம்
/
வலை பின்னும் கூடம் கட்டும் பணி துவக்கம்
ADDED : நவ 04, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை:  சிதம்பரம் அடுத்த தா.சோ.பேட்டை கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 8 லட்சம் மதிப்பில் வலை பின்னும் கூடம் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது.
பாண்டியன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அசோகன், மாவட்ட அவை தலைவர் குமார், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம தலைவர் குமார், நன்றி கூறினார்.

