
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் வி.சி., கட்சியின் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
பேரவை தலைவர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். பேரவை பொதுச் செயலாளர்கள் செல்வகுமார், வேலு, பொன்னுசாமி, ரவி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ராஜாங்கம் வரவேற்றார். துணை மேயர் தாமரைச்செல்வன் பேசினார்.
கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை, பொதுத்தேர்தல் நிதி, சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் சுந்தரவேல், பாலகுமார், கனகசபை, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.