ADDED : ஜன 07, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சம்பத்குமார்,45; இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மாரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, சம்பத்குமார், அவரது மனைவி விஜயலட்சுமியை, மாரி, அவரது உறவினர்கள் , ரங்கநாதன், அதியமான், தாஸ் ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.
இதுகுறித்து சம்பத்குமார் கொடுத்த புகாரில், புதுப்பேட்டை போலீசார், மாரி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.