நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அருகே மழை காரணமாக பசுமாடு இறந்தது.
புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மனைவி ரேணுகா, இவர் தனது வீட்டில் பசு மாடுகள் வைத்து வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக இவர் பசு மாடு இறந்தது. இது குறித்து கால்நடைத்துறையினர் விசாரித்தனர்.