sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சேத்தியாத்தோப்பில் முதலை அச்சம்

/

சேத்தியாத்தோப்பில் முதலை அச்சம்

சேத்தியாத்தோப்பில் முதலை அச்சம்

சேத்தியாத்தோப்பில் முதலை அச்சம்


ADDED : பிப் 15, 2024 06:47 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வெள்ளாற்றில் 7 அடி நீள முதலை தண்ணீரில் உலாவுவதால் பொதுமக்கள், உள்ளூர் மீன்பிடி தொழிலாளர்களை அச்சமடைந்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு நீர்தேக்கத்தில் 7 அடி முதலை நேற்று தண்ணீரில் உலாவிக்கொண்டும், ஆற்றங்கரை மணல் பரப்பில் படுத்திருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேட்டூரிலிருந்து, கொள்ளிடம் அணைக்கரைக்கு வரும் தண்ணீர், அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.

வீராணம் ஏரி உபரி நீர் பூதங்குடி வீனஸ் மதகில் திறந்துவிடப்பட்டு, வெள்ளாற்று அணைக்கட்டில் தேக்கப்பட்டது.

தற்போது, வெள்ளாற்றில் தண்ணீர் முற்றிலுமாக குறைந்து மணல் பரப்பு வெளியே தெரிகிறது.

ஏற்கனவே, தண்ணீர் அதிகம் வந்தபோது, வெள்ளாற்றில் வந்த முதலை, தற்போது தண்ணீர் குறைந்ததால், கரை பகுதிக்கு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

வெள்ளாற்றில் முதலை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் மீன் பிடிக்கும் உள்ளூர் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us