ADDED : அக் 13, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஆம்புலன்சில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
விருத்தாசலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி மனைவி நித்யா,23; நிறைமாத கர்ப்பிணியான இவருக்க, நேற்று முன்தினம் மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால், 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்துவமனை அழைத்து வரப்பட்டார். ஆனால், வழியில் பிரசவ வலி அதிகமானதால், கருவேப்பிலங்குறிச்சி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, மருத்துவ உதவியாளர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார்.
அப்போது, சுகப்பிரசவமாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும் சேயும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
துரிதமாக செயல்பட்டு முதலுதவி செய்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஓட்டுனர் கிருஷ்ணனுக்கு நித்யா, அருள்மணி ஆகியோரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.