sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்

/

விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்

விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்

விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்


ADDED : செப் 03, 2011 01:44 AM

Google News

ADDED : செப் 03, 2011 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை முன்னிட்டு 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 573 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.

3ம் நாளான இன்று (3ம் தேதி) விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் கடலில் கரைக்கப்படுகிறது. சிலைகள் டிராக்டர், மினிடெம்போ உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடலூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் தேவனாம்பட்டினம் கடலில் கரைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 6 போலீசார் கொண்ட ஒரு குழுவினர் படகில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். போலீசாருடன் இணைந்து மீனவர்களும் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.








      Dinamalar
      Follow us