sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி

/

நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி

நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி

நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் மக்கள் அவதி


ADDED : செப் 26, 2011 10:34 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றுகிறார். அவர் காலை ஒன்பது மணி முதல் ஒரு மணி வரையே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். பெரும்பாலும் மதிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை. ஆரம்ப காலத்தில் பிரசவ வார்டு இருந்ததால் 24 மணிநேரமும் நர்ஸ் பணியில் இருந்து வந்தார். ஆனால், தற்போது பிரசவ வார்டு மூடப்பட்டதால் நர்ஸ் பணியில் இல்லை.



டாக்டர் இல்லாத பிற சமயங்களில் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் பகுதியில் அதிகளவு ஏழை விவசாய கூலித் தொழிலாளிகளே வசிக்கின்றனர். 24 மணி நேரம் நகராட்சி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவசரத்திற்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. நேற்று காலை விஷப் பூச்சி கடித்து உயிருக்குப் போராடிய நெல்லிக்குப்பம் அண்ணா நகரைச் சேர்ந்த நாகப்பன் என்பவரை நகராட்சி மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது மருத்துவமனை பூட்டியிருந்தது. காலை 7.30 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மருத்துவமனை நேரத்திற்கு திறக்கப்படாததாலும், டாக்டர், நர்ஸ் இல்லாததாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர் உடன் ஆட்டோ மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். க்கள் நலன் கருதி 24 மணி நேரமும் இயங்கும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.








      Dinamalar
      Follow us