sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வரி செலுத்த தவறினால் நடவடிக்கை கடலுார் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

/

வரி செலுத்த தவறினால் நடவடிக்கை கடலுார் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வரி செலுத்த தவறினால் நடவடிக்கை கடலுார் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வரி செலுத்த தவறினால் நடவடிக்கை கடலுார் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை


ADDED : பிப் 11, 2024 03:14 AM

Google News

ADDED : பிப் 11, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகராட்சிக்கு வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் காந்திராஜ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் கட்டணங்கள் வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் மாநகராட்சிக்கு சொத்துவரி 49.20 சதவீதம் மட்டுமே செலுத்தியுள்ளனர். குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமக்கட்டணங்கள் ஆகியவை குறைந்த சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, வரியை தவறாது செலுத்த வேண்டும்.

தவறினால் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை, கணினி வசூல் மையம், https:tnurbanepay.tn.gov.in. என்ற இணையதளத்தில் செலுத்தும் வசதி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us