sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'

/

"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'

"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'

"சமச்சீர் பாட புத்தகம் வழங்க வலியுறுத்தி 26ல் போராட்டம்'


ADDED : ஜூலை 23, 2011 11:39 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.



சங்கத்தின் மாநிலச் செயலர் ராஜ்மோகன் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமமான, தரமான கல்வி முறையை ஏற்படுத்த கடந்த 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் தற்போதைய அரசு ஈடுபட்டு வருகிறது.

அதேப்போன்று கல்வி கட்டண விஷயத்திலும் தனியார் கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்து வருகிறது. இதனை கண்டித்தும், முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உடனடியாக சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.








      Dinamalar
      Follow us