/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது
/
மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது
ADDED : ஆக 06, 2011 02:18 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே குழந்தை இல்லாத காரணத்தால் மனைவியை கொடுமைப் படுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் பாரதி தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ், 35; இவருக்கும் தம்பிக்குநல்லாண்பட்டினம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகள் லட்சுமி, 27; என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் லட்சுமியை அவரது கணவர் ரமேஷ், அவரது தாயார் ருக்மணி, தங்கை தனவள்ளி ஆகியோர் திட்டியும், அடித்து துன்புறுத்தியும் வந்தனர்.கணவர் ரமேஷ், நீ வீட்டில் இருந்தால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலாவதி வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தார்.தலைமறைவாக உள்ள ருக்மணி, தனவள்ளிஆகியோரைத் தேடி வருகின்றனர்.