/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
/
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
ADDED : ஆக 18, 2011 12:31 AM
கடலூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல் மற்றும் கண்ணில் ஏற்படும் குறைகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி முகாம் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல் மற்றும் கண்ணில் ஏற்படும் குறைகளுக்கு சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி முன்னிலை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அஷா கிறிஸ்டி எமரால்ட் வரவேற்றார். டாக்டர்கள் லட்சுமிகாந்தன், உதவி கண் மருத்துவர் சிவசுப்ரமணியன் பயிற்சி அளித்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் 68 பேர் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், குறுவட்ட மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

