/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
/
புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்
ADDED : ஆக 27, 2011 09:05 PM
கடலூர் : கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது.
கடலூர் புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள இரட்டைப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கி 1ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு இரவு 8 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 1ம் தேதி வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 10 மணிக்கு வினாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை கீர்த்தி வாசன் குருக்கள், நிர்வாக அதிகாரி நாகராஜன் செய்து வருகிறார்.

