ADDED : ஆக 28, 2011 11:06 PM
திட்டக்குடி : ராமநத்தத்தில் அனுக்கிரஹா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திட்டக்குடி அடுத்த ராமநத்தத்தில் கல்வி விழிப்புணர்வு மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மங்களூர் ஒன்றிய கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கம் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் கண்ணன், ராமநத்தம் ஊராட்சித் தலைவர் பூங்கோதை, தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கல்வி விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வீரமணி வரவேற்றார். நவசக்தி டெவலப்பர்ஸ் உரிமையாளர் மணிரத்னம் பேசினார். இந்தியன் வங்கி மேலாளர் கணேசன், நலத்துறை பள்ளி சங்க மாநிலத் தலைவர் பாக்கியராஜ், தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் 33 கிராமத்தைச் சேர்ந்த 333 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அனுக்கிரஹா அறக்கட்டளை சார்பில் சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.