/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் ரகளை 8 பேர் மீது வழக்கு
/
பெண்ணிடம் ரகளை 8 பேர் மீது வழக்கு
ADDED : செப் 08, 2011 11:45 PM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே குடிபோதையில் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் காலனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாயவேல் என்பவருக்கும் கோவில் திருவிழாவின் போது கூத்து நடத் துவதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி வைத்தியநாதன் மனைவி சிவகங்கை, 32, வீட்டில் தனியாக இருந்த போது மாயவேல் மற்றும் அவரது நண்பர்கள் மாணிக்கம், முருகவேல், விஜயகுமார், கருணாகரன், ஞானவேல், வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோர் குடிபோதையில் சேலையை பிடித்து இழுத்து ரகளை யில் ஈடுபட்டு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீ சார் வழக்கு பதிந்து மாயவேல் உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.

