sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி சென்ற வேன் விபத்தில் சிக்கியதுடிரைவர் ஓடியதால் மாணவர்கள் கதறல்

/

பள்ளி சென்ற வேன் விபத்தில் சிக்கியதுடிரைவர் ஓடியதால் மாணவர்கள் கதறல்

பள்ளி சென்ற வேன் விபத்தில் சிக்கியதுடிரைவர் ஓடியதால் மாணவர்கள் கதறல்

பள்ளி சென்ற வேன் விபத்தில் சிக்கியதுடிரைவர் ஓடியதால் மாணவர்கள் கதறல்


ADDED : ஆக 20, 2011 02:51 AM

Google News

ADDED : ஆக 20, 2011 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்:பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்தில் சிக்கியதும், டிரைவர் தப்பியோடியதால் சிறுவர்கள் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் தனியார் வேன்களில் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு கடலூர் அடுத்த கீழ் அருங்குணம் கிராமத்தை சேர்ந்த 20 மாணவர்களுடன் டி.என்.04.எப்.8914 பதிவெண் கொண்ட வேன் கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வேனை, கீழ்அருங்குணத்தைச் சேர்ந்த பழனிவேல், 35, ஓட்டிச் சென்றார்.

திருவந்திபுரம் கெடிலம் ஆற்று பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த பஸ்சை முந்திக் கொண்டு வந்த மோட்டார் பைக் வேன் மீது மோதியது. அதில், கீழ்அருங்குணம் சந்தோஷ், 24, திருவந்திபுரம் குப்புசாமி, 20, ஆகியோர் வேனுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தனர்.உடன் டிரைவர் பழனிவேல், வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். வேனில் இருந்த சிறுவர்கள் செய்வதறியாமல் கதறி அழுதனர்.அவர்களை அந்த வழியே வந்தவர்கள், வேனிலிருந்து பத்திரமாக இறக்கினர். அப்போது அந்த வழியே வந்த அதே பள்ளி பஸ்சில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இரண்டு வாலிபர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us