sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

243 போலீசாருக்கு இடமாறுதல் கடலுார் எஸ்.பி., உத்தரவு

/

243 போலீசாருக்கு இடமாறுதல் கடலுார் எஸ்.பி., உத்தரவு

243 போலீசாருக்கு இடமாறுதல் கடலுார் எஸ்.பி., உத்தரவு

243 போலீசாருக்கு இடமாறுதல் கடலுார் எஸ்.பி., உத்தரவு


ADDED : ஜூலை 07, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 243 போலீசாருக்கு எஸ்.பி., ஜெயக்குமார் இடமாறுதல் உத்தரவு வழங்கினார்.

மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் முதல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வரை பணியிட மாறுதல் சம்பந்தமாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

விண்ணப்ப மனுக்கள் அளித்தவர்களுக்கு நேற்று கடலுார் ஆயுதப்படை மைதானத்தில் கவுன்சிலிங் நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, 243 பேருக்கு காரணங்களை கேட்டு கவுன்சிலிங் முறையில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணி மாறுதல் உத்தரவு வழங்கினார்.

கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், ராஜா, பாலகிருஷ்ணன், விஜிகுமார், லாமேக், ராதாகிருஷ்ணன், சார்லஸ், நிர்வாக அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us