/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 பேருக்கு 'குண்டாஸ்' கடலுார் எஸ்.பி., அதிரடி
/
3 பேருக்கு 'குண்டாஸ்' கடலுார் எஸ்.பி., அதிரடி
ADDED : மார் 19, 2025 04:48 AM

கடலுார் : கஞ்சா வியாபாரிகள் 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலியில் 6 கிலோ கஞ்சா பதுக்கியது தொடர்பாக, கடந்த 1ம் தேதி வட்டம் 29ஐச் சேர்ந்த மோசஸ் சம்பத் மகன் பிரதீப்மோகன்,29; வட்டம் 24ஐ சேர்ந்த, ரவிச்சந்திரன் மகன் சந்துரு (எ) தீபக்ராஜ்,25; மாற்றுக் குடியிருப்பு ஜஹாங்கீர் மகன் ஷாகுல் ஹமீது,25; ஆகியோரை தெர்மல் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்களில், பிரதீப்மோகன் மீது கஞ்சா, சாராயம் உள்ளிட்ட 8 வழக்குகளும், சந்துரு (எ) தீபக்ராஜ் மீது சாராயம், குட்கா என 3 வழக்குகளும், ஷாகுல் ஹமீது மீது 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களின் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கடலுார் சிறை அதிகாரிகளிடம் நெய்வேலி தர்மல் போலீசார் நேற்று வழங்கினர்.