sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம்


ADDED : ஜூலை 03, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ் பாதி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்த்தில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த தொட்டி பழுது ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக இதன் அருகில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பழைய தொட்டியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து துாண்கள் வலுவிழுந்து எப்போது, வேண்டுமானலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us