ADDED : ஜன 30, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடைக்கு சென்ற மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகள் சமிதா, 19; கடலுாரில் அரசு உதவிப் பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சமிதாவை தேடி வருகின்றனர்.