ADDED : நவ 01, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலுாரில் மகள் காணாமல் போனது குறித்து தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
வடலுார் பால்கார காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் மகள் பிரதீபா, 24; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் உமா அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

