ADDED : நவ 12, 2025 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: வீட்டைவிட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த புது க்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகள் செல்வியா, 24; இவர் பி.எஸ்.சி., சைக்காலஜி படித்துவிட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த, 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 8ம் தேதி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த, 9ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற செல்வியா, இதுவரை வீடுதிரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .
இதுகுறித்து அவரது தாய் செல்வபதி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

