நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வயிற்றுவலி தாங்கமுடியாமல் விஷம் குடித்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார், குமாரபேட்டையை சேர்ந்தவர் ராசு, 48; கொத்தனார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் கடந்த 10ம் தேதி, வயிற்றுவலி தாங்கமுடியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டதாக, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

