
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சரவணன், இருதயராஜ், செயலாளர் கோபால்சாமி, இஷ்டலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை தடுக்கும் விதமாக டாஸ்மாக் பணியாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டனம், திருச்சி மாவட்டத்தில் அமராவதி சூப்பர் மார்க்கெட்டில் ரேஷன் கடைக்கான வாடகையை பணியாளர்கள் செலுத்த வேண்டும் என, கூட்டுறவு துறை துறை நிர்பந்தம் செய்கிறது.
இதனை கண்டித்து வரும் 20ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

