ADDED : செப் 05, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு பூவாணிகுப்பத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்,50; இவர் நேற்று முன்தினம், தனது மகன் சுதன், 24; என்பவருடன் அதே பகுதியில் தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ், 35; என்பவர் தனது வயலில் எதற்காக மாடு மேய்க்கிறீர்கள் எனக் கேட்டு சிவக்குமார், சுதனுடன் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், தேவதாஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.