sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தெய்வ தமிழ் பேரவை கடலுாரில் ஆர்ப்பாட்டம்

/

தெய்வ தமிழ் பேரவை கடலுாரில் ஆர்ப்பாட்டம்

தெய்வ தமிழ் பேரவை கடலுாரில் ஆர்ப்பாட்டம்

தெய்வ தமிழ் பேரவை கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 21, 2024 07:44 AM

Google News

ADDED : பிப் 21, 2024 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தெய்வ தமிழ் பேரவை மற்றும் வள்ளலார் பணியகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.

வள்ளலார் பணியகம் வெங்கட்ராமன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் தலைவர் சித்தர்மூங்கிலடியார் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக அரசு வடலுார் வள்ளலார் சத்தியஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், வெளியில் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, ராஜயோக சித்தர் பீடம் வடகுரு மடாதி பதி குச்சனுார் கிழார்,தெய்வத்திருமுறை வழிபாட்டு இயக்கம் மோகன சுந்தரம், வள்ளலார் பணியகம் ராஜமாணிக்கனார், முருகன், தெய்வ தமிழ் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், தமிழ் ஆன்மீக பேரவை ராஜேந்திரன் மற்றும் இளங்கோ, அருணபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளலார் பணியகம் சுப்பிரமணிய சிவா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us