ADDED : ஆக 14, 2026 09:23 PM
அ நிறம் | அளவு
கடலுார்: தென்னை மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி கீழே விழுந்து இறந்தார்.
கடலுார், சேடப்பாளையம் அடுத்த புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் ராஜாமணி,45; இவர், சேடப்பாளையம், நாகம்மாள்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை, பரிசோதித்த டாக்டர், ராஜாமணி இறந்து விட்டதாக கூறினார்.
புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
