/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்காளம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
/
அங்காளம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
ADDED : மார் 19, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது. கடலுார், குப்பன்குளம் கெடிலம் ஆற்றங்கரையோரம் உள்ள கெங்கை பார்த்த அங்காளம்மன் கோவிலில் 25ம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் மற்றும் தீமிதி உற்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. தினமும் அபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் மயானக் கொள்ளை உற்சவம், நேற்று, தீமிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

