/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகம் மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' வினாடி வினா போட்டி
/
கடலுார் துறைமுகம் மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' வினாடி வினா போட்டி
கடலுார் துறைமுகம் மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' வினாடி வினா போட்டி
கடலுார் துறைமுகம் மகளிர் பள்ளியில் 'தினமலர் -பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : ஜன 12, 2025 06:48 AM

கடலுார் : கடலுார் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதுச்சேரி 'தினமலர்- பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்திய பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
கடலுார் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 மாணவிகளை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது. தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை தாங்கினார். போட்டியின் இறுதியில் பிளஸ் 1 மாணவிகள் காயத்ரி, பவித்ரா ஆகியோர் முதலிடம், பிளஸ் 1 மாணவிகள் தீபிகா, விஜிதா ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிளுக்கு வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். ஆசிரியர் பாலமுருகன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர். வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.