sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெயர் எழுதுவதில் பாரபட்சம்; பா.ம.க.,வினர் போராட்டம்

/

பெயர் எழுதுவதில் பாரபட்சம்; பா.ம.க.,வினர் போராட்டம்

பெயர் எழுதுவதில் பாரபட்சம்; பா.ம.க.,வினர் போராட்டம்

பெயர் எழுதுவதில் பாரபட்சம்; பா.ம.க.,வினர் போராட்டம்


ADDED : ஏப் 29, 2025 09:37 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; பயணியர் நிழற்குடையில், பெயர் எழுதுவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, பா.ம.க., வினர், பெயர் எழுதும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் பாலக்கரையில் கடந்த 2006 -07ம் ஆண்டு, அப்போதைய பா.ம.க., எம்.பி., பொன்னுசாமி நிதியில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இதனால், நிழற்குடையில், எம்.பி., பொன்னுசாமி பெயர் பெரிதாக எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, 2024-25ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில், பயணியர் நிழற்குடை புனரமைக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயர்களை பெரிதாக எழுதியுள்ளனர்.

பயணியர் நிழற்குடையை அமைக்க காரணமாக இருந்த முன்னாள் எம்.பி., பொன்னுசாமி பெயரை பாரபட்சத்துடன் எழுதுவதாக கூறி, பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், நிர்வாகிகள் நேற்று, பெயர் பலகை எழுதும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா, பா.ம.க., வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையேற்று அனைவரும் கலந்துச் சென்றனர். இது தொடர்பாக பா.ம.க., வினர் டி.எஸ்.பி., பாலக்கிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us