ADDED : மார் 05, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 55. குடிப் பழக்கம் உள்ளவர்.
கடந்த 28ம் தேதி குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

