ADDED : செப் 23, 2024 08:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் சைக்கிள் வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் அகஸ்டின் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன், மூத்த தமிழாசிரியர் ஜான்அருள்பீட்டர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வராசு வரவேற்றார். பிளஸ்1 மாணவிகள் 86 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
தமிழாசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.