sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்ட அளவிலான தடகள போட்டி சிதம்பரத்தில் 6ம் தேதி துவக்கம்; இன்று மாலைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

/

மாவட்ட அளவிலான தடகள போட்டி சிதம்பரத்தில் 6ம் தேதி துவக்கம்; இன்று மாலைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மாவட்ட அளவிலான தடகள போட்டி சிதம்பரத்தில் 6ம் தேதி துவக்கம்; இன்று மாலைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மாவட்ட அளவிலான தடகள போட்டி சிதம்பரத்தில் 6ம் தேதி துவக்கம்; இன்று மாலைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்


ADDED : செப் 04, 2025 02:42 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான ஏழாவது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் 6ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

கடலுார் மாவட்ட தடகள கழகம் மற்றும் ஏ.பி.சி.,ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் ஏழாவது ஜூனியர் தடகள் சாம்பியன்ஷிப் போட்டிகள், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் செப்.6ம் தேதி நடக்கிறது. அதில் 14வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ட்ரையத்லான், கிட்ஸ் ஜாவலின் போட்டிகள் நடக்கிறது.

16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 60மீ., 80மீ., தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடக்கிறது. 18வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100மீ., 200மீ., 400மீ., ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடக்கிறது.

20வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

கடலுார் மாவட்ட தடகள கழகத்தின் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இத்தகவலை தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் செப்.4ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us