sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொறுப்பாளர் நியமனத்துக்கு நன்றி தி.மு.க.,வினர் பேனரால் சர்ச்சை

/

பொறுப்பாளர் நியமனத்துக்கு நன்றி தி.மு.க.,வினர் பேனரால் சர்ச்சை

பொறுப்பாளர் நியமனத்துக்கு நன்றி தி.மு.க.,வினர் பேனரால் சர்ச்சை

பொறுப்பாளர் நியமனத்துக்கு நன்றி தி.மு.க.,வினர் பேனரால் சர்ச்சை


ADDED : ஜன 27, 2025 04:55 AM

Google News

ADDED : ஜன 27, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : கம்மாபுரம் ஒன்றியத்தில் பணித்தள பொறுப்பாளர்களை நியமித்த தி.மு.க., நிர்வாகிக்கு பேனர் வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் ஏரி, குளங்கள், வடிகால் சீரமைப்பு மற்றும் மண் சார்ந்த வேலைகளில் கிராம மக்கள் ஈடுபடுகின்றனர். அனைவருக்கும் வேலை கிடைக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்படுகிறது. மேலும், அந்தந்த பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.

இதனை சரிபார்க்கும் பணியில் பணித்தள பொறுப்பாளர் என்ற அதிகாரி பணியில் இருப்பார். அவரே வேலை வழங்குவது, சரிபார்ப்பு, ஊதியம் போன்ற பணிகளை கவனிக்கிறார். பஞ்., தலைவர்கள் பதவிக்காலம் முடிந்து, பி.டி.ஓ.,க்கள் மேற்பார்வையில் இருந்தாலும், தேசிய ஊரக வேலை திட்டப் பணிகள் பணித்தள பொறுப்பாளர் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதனால், பணித்தள பொறுப்பாளர்களை தங்களுக்கு வேண்டிய நபர்களை நியமிக்கும் வேலையில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தீவிரம் காட்டினர். இதன் மூலம் ஊராட்சிகளில் குறிப்பிட்ட நிதியை மாதந்தோறும் கமிஷனாக பெற முடிவு செய்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டப்பட்டது.

இதனை நிரூபிக்கும் வகையில், கம்மாபுரம் ஒன்றியம் கார்குடல் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்திற்காக, அமைச்சர் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளருக்கு நன்றி அறிவிப்பு பேனர், விருத்தாசலம் - பரங்கிப் பேட்டை நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டப் பணிக்கு, தி.மு.க., நிர்வாகிக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us