sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பன்றிக்கு வைத்த வெடியில் நாய் பலி

/

பன்றிக்கு வைத்த வெடியில் நாய் பலி

பன்றிக்கு வைத்த வெடியில் நாய் பலி

பன்றிக்கு வைத்த வெடியில் நாய் பலி


ADDED : நவ 08, 2025 02:20 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், புதுஇளவரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் திருவேங்கடம், 42. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில், வாழை சாகுபடி செய்து கொண்டு, அங்கேயே வசிக்கிறார். பாதுகாப்பு கருதி தனது வயலில் நாய்களையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி மாலை, காவலுக்கு நின்றிருந்த நாய் ஒன்று, வெடி விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தது. இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அதில், பன்றிக்கு வைத்திருந்த நாட்டு வெடியை, வளர்ப்பு நாய் கடித்தபோது, வெடித்து இறந்தது தெரிந்தது.

மேலும், அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் தேவகுமார், 38, என்பவர் வெடி வைத்ததால், நாய் இறந்ததாக திருவேங்கடம் புகார் தெரிவித்தார். அவர், பன்றி இறைச்சிக்காக வெடி வைத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பன்றிக்கு வைத்த வெடியில், வளர்ப்பு நாய் சிக்கி பரிதாபமாக இறந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us