ADDED : ஜன 22, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர். இவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.
இவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ரமேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.
அவரது முயற்சியால் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் இறந்த பாஸ்கரின் கண்களை தானமாக பெற்றனர்.
அவரது மனைவி தாமரைச்செல்வி, மகன்கள் தமிழரசன், தமிழ்வாணன், மகள்கள் தமிழரசி, கனிமொழி, தம்பிகள் பஞ்சாட்சரம், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.