ADDED : ஏப் 18, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் அரசு பஸ் மோதி, பைக்கில் சென்ற டிரைவர் இறந்தார்.
கடலுார் வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் கோபிநாத்,26; டிரைவர். இவரும், கடலுார் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர் கலைமுகிலன்,35; என்பவரும் நேற்று அதிகாலை பஸ் நிலையத்தில் இருந்து மஞ்சக்குப்பம் நோக்கி தனித்தனி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
கடலுார் புதுநகர் போலீஸ் நிலையம் அருகில் சென்ற போது, பின்னால் சென்னை நோக்கி வந்த சொகுசு பஸ் இருவரின் பைக்கிலும் மோதியது.
இதில், கோபிநாத் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த நிலையில், அவரது மீது சொகுசு பஸ் ஏறி இறங்கியது. இதில் உடல்நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.