/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 31, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் தடுப்பு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.