sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கல்விக்கடன் வழங்கும் முகாம் விருத்தாசலத்தில் இன்று நடக்கிறது

/

கல்விக்கடன் வழங்கும் முகாம் விருத்தாசலத்தில் இன்று நடக்கிறது

கல்விக்கடன் வழங்கும் முகாம் விருத்தாசலத்தில் இன்று நடக்கிறது

கல்விக்கடன் வழங்கும் முகாம் விருத்தாசலத்தில் இன்று நடக்கிறது


ADDED : செப் 01, 2025 12:41 AM

Google News

ADDED : செப் 01, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி, மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் விருத்தாசலத்தில் இன்று நடக்கிறது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' வழிகாட்டி நிகழ்ச்சி இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12:30 வரை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் நடக்கிறது.

முகாமில், உயர்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல், 'உங்கள் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தேர்வு செய்வது', வங்கி கடன் மற்றும் அரசின் உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள், அரசின் திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடர்பான விபரங்களை அறிந்திடும் பொருட்டு அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டிகள் மாணவர்களுக்கு எளிதில் புரிந்திடும் பொருட்டு தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளனர்.

மேலும், இவ்விழாவில் கல்விக்கடன் வழங்கும் முகாமும் நடைபெறும். ஒவ்வொரு கல்லுாரிக்கும் அக்கல்லுாரியின் முதல்வர் கல்விக்கடன் வழங்குதல் தொடர்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவார். கல்விக் கடன் கோரும் மாணவ மாணவியர்கள் http://www.vidyalakshmi.co.in/students என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும் உரிய ஆவணங்களுடன் ஜாதிச்சான்று, வருமானச்சான்று தேவைப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இணையவழியில் உடனடியாக சான்றுகள் வழங்கிட வசதியாக மாவட்ட மின்ஆளுமை, மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து அரங்குகள் அமைத்திட மேலாளர், மாவட்ட முன்னோடி வங்கி ஆகியோர் மூலம் உதவி மையம் அமைக்கப்படும்.

மேலும், மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் விருத்தாசலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு கல்விக் கடன் பெற்றிட விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us