/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
ADDED : மார் 19, 2025 09:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள 200 மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் வேல்முருகன், மாணவர்களுக்கு கல்வி உபரணங்களை வழங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
முன்னாள் மாணவர்கள், மலர்மணி, பாஸ்கர், பூமாதேவி, மைதிலி, சம்சாத் பேகம் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பரந்தாமன், மகாலட்சுமி மணிமுத்தரசன், பரசுராமன், கோபாலகிருஷ்ணன், நாகராஜ், முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.