ADDED : மார் 29, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்,62; இவர் கடந்த 26ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
சிறுமி அளித்த தகவலின் பேரில், நடந்த சம்பவம் குறித்து அவரது தாய் கடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, ஜனார்த்தனனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.