ADDED : செப் 08, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் முகுந்தநல்லுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பூவராகவன், 63; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து பூவராகனை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.