ADDED : மே 13, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 70. என்.எல்.சி.,யில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், விவசாயம் செய்து வந்தார். வாழை பயிருக்காக அவர், தனது மகன் ஜெயக்குமாரிடம் பணம் கேட்டுள்ளார்.
ஜெயக்குமார் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த ஆறுமுகம், நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.