ADDED : ஜூலை 10, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம், 60; இவர் கடந்த 6ம் தேதி பெண்ணாடத்தில் இருந்து மாளிகைக்கோட்டத்திற்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாளிகைக்கோட்டம், மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயமடைந்தார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

