ADDED : ஏப் 15, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; கம்மாபுரம் அருகே சிமெண்ட் லாரி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் சீனிவாசன் மகன் சிவக்குமார், 55. இவர் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், விருத்தாசலம் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, சிதம்பரத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி மோதியது.
படுகாயமடைந்த சிவக்குமார் அதே இடத்தில் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்டம், வளவனுார், குமாரகுப்பத்தை சேர்ந்த டிரைவரான ஜோதி மகன் ராஜ், 35; மீது கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.