/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
/
மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
ADDED : நவ 06, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கிள்ளை அருகே மொபட் டில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
கிள்ளை அடுத்த நஞ்சைமகத்து வாழ்க்கை பெரிய தெருவை சேர்ந்தவர் நடேசன், 65. இவர், கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து கிள்ளை பெரியமதகுக்கு மொபட்டில் சென்றார்.
வடக்குச்சாவடி அருகே செல்லும்போது, திடீரென பன்றி ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், திடீர் பிரேக் பிடித்த போது நிலை தடுமாறி நடேசன் மொபட்டில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து குறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

