ADDED : அக் 22, 2025 09:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பாரதி நகரை சேர்ந்தவர் கலி யன்,70; கூலி தொழிலாளி; இவர், நேற்று முன்தினம் காலை 10:௦௦ மணி அளவில் தனது வீட்டின் இரும்பு கேட்டினை பிடித்தார். அப்போது இரும்பு கேட்டில் மின் கசிவு இருந்ததால், முதியவர் மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி இறந் தார்.
இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.