/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : நவ 29, 2024 07:09 AM
கடலுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பளித்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையைச் சேர்ந்தவர் 65 வயது கூலி தொழிலாளி. இவர், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, முதியவரை கைது செய்தனர். கடலுார் 'போக்சோ' சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார்.
இதில், முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ரத்தினம் ஆஜரானார்.