ADDED : ஏப் 07, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : பைக் மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த எஸ்.புதுக்குப்பம், அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு, 60; இவர் நேற்று முன்தினம் மொபட்டில் குறிஞ்சிப்பாடி-பாலுார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
வெங்கடாம்பேட்டை அருகே சென்ற போது பின்னால் வந்த பைக், மொபட் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த வைரக்கண்ணு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

